பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.
பதவி விலகல் கடிதம்
தனது பதவி விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான சபையொன்றை நியமிப்பதற்கு சுதந்திரம் வழங்குவதற்காக அவர் தனது பதவிகளில் இருந்து விலகுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.