கிருசாந்தியுடைய கொலைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எந்த தொடர்புமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(30) உரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கிருசாந்தியுடைய கொலையானது 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.அந்தகாலத்தில் நாங்கள் நாடாளுமன்றத்திலும் இல்லை.
செம்மணி அணையாதீப இறுதி போராட்டத்தின் போது நான் சென்ற போது அங்கு ஒருசிலர் எங்களுக்கு எதிராக செயற்பட்டனர்.
இது ஒரு திட்டமிட்ட செயல், அங்குள்ள மக்களை நாங்கள் குறைகூறவில்லை.
நாங்கள் இவ்வாறான பிரச்சினைகளை கண்டு ஓடுபவர்கள் இல்லை” என குறிப்பிட்டார்.