பசுமாட்டில் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி சுமார் 800 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இமாஷ் தேவிது என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான். இந்த சிறுவன்அனுராதபுரம் விஹாரபலுகம பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தார்.
நண்பர்களுடன் இணைந்து பசுவுடன் விளையாடிய சிறுவன்
நேற்று முன்தினம் (13) மாலை தனது சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட பசுவுடன் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
இதன்போது பசு அமைதியின்றி சாலையில் ஓடியது, மேலும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு சிறுவனின் உடலில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, சிறுவன் சுமார் 800 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால், படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை
சிறுவனின் நிலை மோசமாக இருப்பதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.
சிறுவனின் மூளை கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது, நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.