திருகோணமலை (trincomale)தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால்
பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து
உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (24)இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தை
மிஹ்ரான் இசான் வயது (ஒரு வயது எட்டுமாதம் ) எனத் தெரியவருகிறது.
வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்த குழந்தை
வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடிய போது
சுமார் 100 மீற்றர் தூரத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக
மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்த
குழந்தையின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்க்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன்
சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.