செம்மணியில் இறந்தவர்கள் தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது எதிர்வரும் 5 ஆம் திகதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை அணையாத தீபம் வைக்கப்பட்டுள்ள யாழ்.வரவேற்பு சோதனை சாவடி இருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த இடத்திலே ஊர்தி ஒன்றை நிறுத்தி அனைத்து தரப்பினரையும் அழைத்து நினைவேந்தல் நிகழ்வை நடாத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

