யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று காலை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
ஆசனம் ஒதுக்கீடு
இதன்போது பிரதேச சபை தவிசாளருக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அமர வேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை கூட்டத்தில் வெளிப்படுத்தினர்.
பொலிஸாருக்கு உத்தரவு
இதன்போது அனுமதி இல்லாமல் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள பிரதேச சபை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




