நிட்டம்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தம்பதி காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் பின்னகொல்லவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த தம்பதி சிகிச்சைக்காக வத்துருபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

