திருகோணமலை சிவன் கோயில் பசு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இறைச்சிக்காக பசு வெட்டப்பட்டு எடுத்துச் செல்லும்போது மக்கள் கண்டு எதிர்ப்பு
தெரிவித்ததன் அடிப்படையில் கொல்லப்பட்ட பசுவின் பாகங்களை வீதியில் வீசிவிட்டு
சந்தேக நபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இதனால் மாட்டின் உடற் பாகங்கள் வீதியில் வீசப்பட்டுள்ளதுடன் அறுப்பதற்கு
பயன்படுத்தப்படும் கத்தி,கோடாரியையும் மீட்கப்பட்டுள்ளது.

