இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளையில் ரைற்றன்
ஸ்போட்சினரால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டி, இன்றையதினம்(04.02.2025) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை வித்யா விளையாட்டு கழக மைதானத்தில் அணிக்கு 11 பேருடனும் 6 பந்து பரிமாற்றங்களுடனும் இந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
10 அணிகள்
இதன்போது, 10 அணிகள் போட்டியில் பங்குபற்றியுள்ளன.
முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. அமரசிங்க, முள்ளியவளை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி அமரதுங்க மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.