கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள், மோட்டார் திறன் (motor capacity) தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளால் இலங்கை சுங்க சேவையால் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
மின்சார வாகனங்களை மேலதிக வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு விடுவிக்க
இலங்கை சுங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த இணக்கம் அறிவிக்கப்பட்டது.

