முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொல்லியல் திணைக்கள விவகாரத்தில் வலி. கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – தவிசாளரிடையே தர்க்கம்

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிகாமம்
கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கும் பிருதேச
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்திக்கும் இடையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்
தொல்லியல் திணைக்களம் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

இவ்விவாதத்தினைத் தொடர்ந்து நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி
பிரதேச சபையிடம் அதனை கையளிக்க வேண்டும் எனவும் பிரதேச அபிவிருத்திக்
குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும், வலிகாமம் கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்
நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்
நிலாவரை பகுதி சுற்றுலா வலயமாகவுள்ளமையினால் அதனை மேம்படுத்துவது பற்றிய
ஆராயப்பட்டது.

இதன்போது இப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகளால்
அதனை முன்னேற்ற முடியாதுள்ளது என தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர், தொல்லியல் திணைக்களத்தினால் இப்போது பிரச்சினை கிடையாது.

எச்சரிக்கை விடுப்பு.. 

கடந்த
கால அரசாங்கத்தில் இடம்பெற்றது போல தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை.
நீங்கள் அரசியல் ரீதியில் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம். என தொடர்ந்து
அரசாங்கத்தினை நியாயப்படுத்தம் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தொல்லியல் திணைக்கள விவகாரத்தில் வலி. கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் - தவிசாளரிடையே தர்க்கம் | Department Of Archaeology In The Nilavarai

அபிவிருத்திக்குழு தலைவரின் கருத்துக்களை எதிர்த்த தவிசாளர், தொல்லியல்
திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பௌத்த பேரினவாத அடிப்படையில் கொண்டுள்ள
கட்டமைப்பிலோ அல்லது அத் திணைக்களங்களுக்குக் குவிக்கப்பட்டுள்ள சட்ட
அதிகாரங்களிலோ அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தாது சம காலத்தில் அத்
திணைக்களங்களால் எமது மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறக்கூடாது.

எமது
மக்கள் சம கால சமாளிப்புக்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக நிரந்தரத் தீர்வினை
எதிர்பார்க்கின்றனர்.

தங்களுடைய கட்சி நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மையுடன் உள்ளது.

இந்த
நிலையில் சரியா சட்ட மாற்றங்களை இலகுவாகக் கொண்டுவந்து எமது மக்களுக்கு சரியான
தீர்வுகளை முன்வைக்க முடியும். இப்போது பிரச்சினையில்லை என்பது பதில் அல்ல.

சரியான தீர்வுகளே முக்கியம் என தவிசாளரினால் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து
கூட்டத்தினை நிறுத்த வேண்டிவரும் என அபிவிருத்திக் குழுத்தலைவர் தவிசாளரை
நோக்கி எச்சரித்தார்.

எனினும் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து அபிவிருத்திக் குழுத்தலைவர் நிலாவரையில் இருந்து தொல்லியல்
திணைக்களத்தினை விலக்கி பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்கான முடிவை
எடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.