மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை இரண்டு நாட்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திணைக்களம் மூடப்படும் திகதிகள்
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் இலக்கம் 06 மற்றும் 07 ஆகிய பிரிவுகளின் வாக்களிப்பு நிலையமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் செயற்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


