வடமாகாண சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிப்பது
தொடர்பான கலந்துரையாடலொன்று அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வட மாகாண சுற்றுலா துறையின் அனுசரணையில் மன்னார்
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (22) மாலை
வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார பீடத்தின் நெறிப்படுத்தலில்
கலந்துரையாடல் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்திற்கான இக்கலந்துரையாடலில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி
பேராசிரியர் யோ. நந்தகோபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர்,மேலதீக மாவட்ட செயலாளர் நிர்வாகம்,
வடமாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல்
பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வன வள
அதிகாரிகள், வனஜீவராசிகள் அதிகாரிகள், பொறியியலாளர், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான சிரேஸ்ட விரிவுரையாளர்
கள் பலர் கலந்து கொண்டனர்.








