யாழில் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(16.12.2025) மதியம் இடம்பெற்றுள்ளது.
அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றையதினம்(15.12.2025) தாவடி பகுதியில் 2ஆவது மாடியில் வேலை செய்தபோது தவறி
1ஆவது மாடியில் விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார்.

