கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா அவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை நோக்கி ஊர்தி பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (18) காலை தர்மபுரம் பகுதியிலிருந்து இந்த ஊர்தி புறப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து 16 வருடங்கள் ஆகின்ற நிலையில் அரசியல் கைதிகளை முழுமையாக
விடுவிக்க வலியுறுத்தியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த ஊர்தி பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.