2025 மே மாத நிலவரப்படி, மத்திய மருந்து சேமிப்பு வசதிகளில் கிட்டத்தட்ட 180
அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க, இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள்
பற்றாக்குறையாக உள்ளன.
மருந்துப் பற்றாக்குறை
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும்
சிறுநீரகம் தொடர்பான நிலைமைகளுக்கான மருந்துகள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன.

அதேநேரம்,புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதையும்
விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பல நோயாளிகளுக்கு சிகிச்சை அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளது.
அத்தகைய மருந்துகளை தனிப்பட்ட முறையில் வாங்குவது பெரும்பாலும் மலிவு
விலையில் இல்லை.எனவே பாதிக்கப்பட்டவர்களின் சுமையை, இது அதிகரிக்கிறது
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
கடந்த கால பற்றாக்குறையிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறியதற்காக சுகாதார
அமைச்சகத்தை விஜேசிங்க விமர்சித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இருவரும், இதற்கான அதிக பொறுப்பை ஏற்க
வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினை ஏன் முன்னதாகவே கண்டறியப்படவில்லை
என்றும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க கேள்வி
எழுப்பியுள்ளார்.

