கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்
தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில்
வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின
நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
கடும் மழைக்குமத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது
உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





