தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல அந்த பதவியிருந்து விலகி இன்று(12) நள்ளிரவுடன் 8 மாதங்கள் கடந்து விட்டன.
அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையே அவரது பாவி விலகலுக்கு காரணமாக அமைந்தது.
பதவி விலகிய ரன்வெல
எதிர்காலத்தில் தனது கலாநிதி சான்றிதழை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிவித்து டிசம்பர் 13ஆம் திகதி ரன்வல பதவி விலகினார்.
ஆனால், 8 மாதங்கள் கடந்தும், இதுவரை அவரது கலாநிதி பட்டப்படிப்பு சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை.
ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றதாகவும் கூறிய ரன்வல இதுவரை சான்றிதழ் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.