தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய
அலுவலகத்தில் குறித்த முறைபப்பாடு இன்று(23.05.2025) பிற்பகல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும், தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் உப்பள ஊழியர்கள் 11 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
ஊழியர்களின் போராட்டம்
குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக, பருவ கால ஊழியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

