எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கோர விபத்து நேற்று இரவு (4) எல்ல – வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

