ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாளை முதல் 23 ஆம் திகதி வரையான இரண்டு நாட்களுக்கு குறித்த சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய சேவைகளின் டிஜிட்டல் தரவு அமைப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அடிப்படை சேவை
சேவைகளுக்கான முன்பதிவு செய்தவர்களுக்கு 23 ஆம் திகதி முதல் மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என்று தொழிலாளர் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்தார்.