சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிக்கும் ஒரு இலங்கை பெண்
பயணிக்கும் இடையேயான உரையாடலைக் காட்டும் காணொளி 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்தது
என்று பணியக தலைவர் கோசல விக்ரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
சுற்றுலா விசாவில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அதிகாரி
அப்பெண்ணிடம் கூறுவது அந்தக் காணொளியில் உள்ளது.
ஆட்கடத்தல் மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்குகள் அதிகரித்ததை தொடர்ந்து இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் மியன்மார் மற்றும் தாய்லாந்து போன்ற
நாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட
காலகட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது என்று தலைவர் கூறியுள்ளார்.

காணொளி தொடர்பில் விளக்கம்
எனினும் சமூக ஊடகங்களில் அது தற்போது நடந்த சம்பவமாக காட்டப்படுவது தவறு
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் வாராந்த அமைச்சரவை ஊடகச் சந்திப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தை ஆராய்வதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

