பெலிஹூல் ஓயா ஆற்றுக்கு நீராட சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை – சமனலவெவ பகுதியில் நீராடச் சென்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று மாலை தந்தை ஒருவரும் அவரது மகனும் ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
காணாமல் போன நபர் உயிரிழப்பு
இதன்போது மகன் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட போதே தந்தை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலாங்கொடை அளுத்நுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

