வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் (Revolver) ஒன்று, ஏகல பிரதேசத்தில் வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜா-எல காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏகல விகாரை வீதியிலேயே இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
குற்றச் செயலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா..!
குறித்த ரிவோல்வர் இயங்கும் நிலையில் உள்ளதாகவும், ஏதேனும் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்துவதற்கு மற்றொரு நபர் எடுத்துச் செல்வதற்காகவே இவ்விடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்தறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறை பொறுப்பில் எடுக்கப்பட்ட ரிவோல்வரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், அதனைக் கொண்டு மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட குற்றம் என்ன என்பது குறித்தும் ஜா-எல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

