இலங்கையின் அரச மருத்துவமனையொன்றில் செயற்கை கருத்தரித்தல்(IVF) மூலம் கருவான
முதலாவது குழந்தையின் பிறப்பு, அரச சுகாதாரப் பராமரிப்பில் இடம்பெற்றுள்ளது.
ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் சிசேரியன் முறையில்
நேற்று(31) இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்
துறையின் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் ஒரு வருட கால முயற்சியைத் தொடர்ந்து
இநத வெற்றிகரமான பிறப்பு நிகழ்ந்துள்ளது.
செயற்கை கருத்தரிப்பு
குழந்தையை பிரசவித்த 31 வயதான தாயும் அவரது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன்
உள்ளனர்.

செயற்கை கருத்தரிப்பு செயன்முறை முதன்முதலில் கடந்த ஆண்டு குறித்த
பல்கலைக்கழகத்தின் கருவுறுதல் மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த பிரசவம் பேராசிரியர் ரசிகா ஹேரத் தலைமையில் நடைபெற்றுள்ளது.

