யாழ்ப்பாணம் – காரைநகர் மேற்கு வீதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து கொண்டிருப்பதை அவதானிக்க
முடிந்தது.
போக்குவரத்து சிரமம்
காரைநகரின் மிக முக்கியமான வீதியாக குறித்த வீதியினாலேயே சுற்றுலா பயணிகள்
அதிகம் செல்லும் காரைநகர் கடற்கரைக்கும் செல்லவேண்டி உள்ளது.

அத்தோடு வெள்ள நீர் தேங்கியுள்ள இந்த வீதியின் அருகில் வங்கிகள், வைத்தியசாலை,
பாடசாலை, தபால் நிலையம் ஆகியன அமையப் பெற்றுள்ளது.

