யாழ்ப்பாணம்(Jaffna) வல்லை கடற்கரைப் பகுதிகளுக்கு வெளிநாட்டு பறவைகள் தற்போது படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகள்
பூநாரை( flamingo) என அழைக்கப்படும் இவ் வெளிநாட்டு பறவைகள் அப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளன.
இதேவேளை, கடந்த காலங்களில் மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள் பெருமளவில் வருகை தந்திருந்த நிலையில், தற்போது அவை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.