இலங்கையின் (Sri Lanka) புலனாய்வு துறைக்குள் சர்வதேச நாடுகளின் ஊடுருவல் காணப்படலாம் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை புலனாய்வுத்துறையில் திடீர் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவின் (India) ஊடுருவல் அதிகம் காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
2017 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இலங்கை வந்த போது, பெருமளவான இந்திய புலனாய்வாளர்கள் இலங்கைக்குள் ஊடுருவி இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
இந்தியாவை மெல்ல ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசு ஓரங்கட்டுவது புலப்படுகின்ற நிலையில் இவ்வாறான சூழல் உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாடுகளின் தலையீடு, இலங்கையின் அரசியல் எதிர்காலம், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/xC9oFXoXMk8