இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியும் பயங்கரவாதத்தை
எதிர்கொள்வதும் ஒரே நேரத்தில் தொடர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
த இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய ரணில் விக்ரமசிங்க,
பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வளர்ச்சியை அடைந்த இலங்கையை, இந்தியா பின்பற்ற
வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை எதிர்கொண்டு மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தவும்
முதலீட்டு மண்டலங்களை அமைக்க இலங்கையால் முடிந்தது.

இந்தநிலையில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறதா
அல்லது இன்று இருப்பது போலவே இருக்கப்போகிறதா என்று அவர் கேள்வி
எழுப்பியுள்ளார்.

