எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கான
சாத்தியக்கூறு இல்லை என எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை இதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் திருப்பிச் செலுத்தும் கடமை
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் வைத்தே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய வரிச் சலுகை வழங்கப்பட்டால் அரசாங்கம், தமது கடன் திருப்பிச்
செலுத்தும் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்கொடி
சுட்டிக்காட்டியுள்ளார்.

