இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் கம்பஹா (Gampaha) நகரமே வெள்ளத்தில் மூழ்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவசர நிலைகளின் போது இடர் நிலைகளை தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

