மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாயா பெனட்சா என்ற ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அவர் ஒரு சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
எதிர்பார்ப்பு
இந்த நிலையில், கட்டுப்பணம் செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் தான் போட்டியிடுவதாக மாயா பெனட்சா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.