ரஸ்யா இந்தியாவிற்குள் கால் பதிக்குமாக இருந்தால் இலங்கை அமெரிக்காவிற்கு தேவைப்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும் என பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ்,தெரிவித்தார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இதன்காரணமாகத் தான் இந்தியாவில் இருந்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விமானம் சென்றவுடன் அமெரிக்காவின் globemaster-17 கட்டுநாயக்காவில் தரையிறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா அனைத்து நாடுகளையும் இழிவுபடுத்தி தான் இலங்கைக்குள் ஒரு மேல்நிலையில் இருக்க முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ,அந்த இந்தியாவின் நோக்கம் அமெரிக்க படையினரின் தரையிறக்கத்துடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

