பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை (Galagoda Aththe Gnanasara) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (25.02.2025)கொழும்பு மேல் நீதிமன்றத்தால் (colombo high court) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு மனு
இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
You May like this
https://www.youtube.com/embed/zRrdBTAkKvs