முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடி வெளியிட்ட அறிக்கை

வடக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட பெருந்தெகையான தங்கம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில் விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்கப் பொருட்கள் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பாதுகாப்புப் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களை முறையாக மதிப்பிடுவதற்காக தேசிய ரத்தினக் கல் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தற்காலிக அலுவலகம் இராணுவத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும் சிஐடி அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகமவிடம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை மா அதிபரின் முறைப்பாடு 

அதன்படி, தொடர்புடைய தங்கப் பொருட்களின் எடை மற்றும் மதிப்பு போன்ற தேவையான விவரங்கள் உள்ளிடப்பட்டு வழக்குப் பொருட்களாக ஆவணப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடி வெளியிட்ட அறிக்கை | Gold From Ltte Banks Handed Over To Central Bank

மேலும், கொழும்பு குற்றப் பதிவுப் பிரிவின் அதிகாரிகள் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று தொடர்புடைய தங்கப் பொருட்களின் புகைப்படம் எடுப்பார்கள் என்றும், இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளும் தொடர்புடைய தங்கப் பொருட்களை மதிப்பிடுவதில் பங்கேற்பார்கள் என்றும் சிஐடி அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இலங்கை இராணுவத்திடம் தங்கம் இருப்பதாக ஏப்ரல் 29, 2025 அன்று காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் இந்த உண்மைகளை சமர்பித்துள்ளனர்.

5182 தங்கப் பொருட்கள்

மேலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தங்கப் பொருட்களை மதிப்பிட்ட பின்னர் அவற்றை இலங்கை மத்திய வங்கியின் காவலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடி வெளியிட்ட அறிக்கை | Gold From Ltte Banks Handed Over To Central Bank

இராணுவத்திடம் இருப்பதாகக் கூறப்படும் 80 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களில், 5182 தங்கப் பொருட்கள் 3866 வழக்குப் பொருட்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் என்றும், தங்கப் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியின் 9 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டதாகவும் சிஐடியினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, சிஐடி அதிகாரிகள், பொருட்களின் புகைப்படங்கள் உட்பட விரிவான அறிக்கையையும் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதன்படி, இந்த விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு தலைமை நீதிபதி சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.