யாழில் அரச அதிகாரி ஒருவரின் வாகனமும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடர்பிலான விசாரணை
விபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

