யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் முயற்சியினால் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பிரதான பேருந்து
நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி நிலையம் வரை அரச பேருந்து சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நீண்டநாள் போக்குவரத்து பிரச்சினையை
தீர்க்கும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாநகர சபை
உறுப்பினர்கள் பங்கேற்றனர்.




