குறிப்பிட்ட முறையின் கீழ் அரச சேவை நியமனங்கள் வழங்கப்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் ஆணைக்குழு, மாகாணசபைகள் உட்பட 10 நிறுவனங்களில் 7456 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
இதற்காக, தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அரச சேவையில் 15921 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திறைசேரியின் திறனுக்கு ஏற்ப வெற்றிடங்கள் ஆராயப்பட்டு தேவையான வெற்றிடங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

