டிட்வா சூறாவளி தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு
ஒப்புதல் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ், பிரதமர்
ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையின்
சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்புடைய வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.
முன்னதாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 5 அன்று நாடாளுமன்றத்தில்,
அரசாங்கத்தின் கோரிக்கை 500 பில்லியன் துணை மதிப்பீட்டிற்காக இருக்கும் என்று
கூறியிருந்தார்.
அவசர பழுதுபார்ப்பு செலவுகள்
ஆனால் நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசர பழுதுபார்ப்பு செலவுகள் குறித்த
புதிய மதிப்பீடுகள் கணக்கிடப்பட்ட பின்னர் இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக
அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, துணை மதிப்பீடு டிசம்பர் 18, வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில்
விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும்,
அதன் பிறகு சபை, 2026 ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும்.

