முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்னராஜபக்சவின் (Somaratne Rajapakse) உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம்பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து
வருகிறார்.

ஏற்கனவே செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள் வரை
புதைக்கப்பட்டுள்ளதாக அவர் வழங்கிய வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

அநுரவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் 

செம்மணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம்
கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது
கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க
தயாராக இருப்பதாக அவரின் மனைவி ஜனாதிபதி அனுரவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் எழுதியதாக ஊடகங்களில்
பார்த்தேன்.

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம் | Govt Is Responsible If Somaratne Life Is In Danger

எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை
கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். ஆகவே அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அறிய வேண்டும்.

அவர் சிறையில் உள்ள
நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே
பொறுப்பேற்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.