நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்
அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
ஊர்காவற்றை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை
நீதிமன்றத்தில் சான்று பொருளாக துப்பாக்கி இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.




