பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய நீக்கப்பட்டால், அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை இழக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்தமஹா தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த ஐம்பத்து நான்கு எம்.பி.க்கள் சுதந்திரமாக மாறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் தொடர்பான நெருக்கடி
சுப்ரீம்சாட் செயற்கைக்கோள் தொடர்பான நெருக்கடி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சுப்ரீம் சாட் செயற்கைக்கோளின் உண்மை நிலையை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என்றும், உகண்டாவில் மறைக்கப்பட்ட டொலர்களின் கதையையும் அதைச் சொன்ன நபரே பொய் என ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.