பஞ்ச கோபுரங்களைக் கொண்ட யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
பெருவிழா இன்று(04) இடம்பெற்றுள்ளது.
அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள்
நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன்
முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.
திருவிருவிழாவாக தீர்த்த உற்சவம்
12 நாட்களைகொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த. 25ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் நடைபெற்றது.
இந்நிலையில் 11ஆவது நாளான இன்று ரத உற்சவமும் நாளை 12ஆம் நாள்
திருவிருவிழாவாக தீர்த்த உற்சவமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

