பெண்களுக்கு தன்னை அழகாக வைத்துகொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு விடயமாக எப்போதும் காணப்படும்.
இதில் முகத்தை வெண்மையாக்குவது என்பது அதில் பிரதான விடயமாக காணப்படுகின்ற நிலையில், அதற்காக பலதரப்பட்ட விடயங்களை அவர்கள் மேற்கொள்வதுண்டு.
இந்தநிலையில், இவ்வாறான கடினமான விடயங்கள் அல்லாமல் இலகுவாக மற்றும் இயற்கையாக எவ்வாறு வெண்மையாக்கலாம் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை- 1
- உப்பு- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின் முகத்தை நீரில் கழுவி துடைத்துவிட்டு, பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
-
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.