கணவரை உலக்கையால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளதாக மிகிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சிசிரகுமார (வயது 67)என்பவரே மனைவியின் உலக்கை தாக்குதலுக்கு பலியானவர் ஆவார்.
இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வருகிறார்.
குடும்ப தகராறு
குடும்ப தகராறு அதிகரித்தநிலையில், மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் கணவனை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மனைவி கைது
இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மனைவியான( 67 வயது) ஓய்வு பெற்ற பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

