ஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதி இது என்றும், ஜனவரி 31 ஆம் திகதிக்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் தொன் உப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உப்பு இறக்குமதி
நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய பருவமழைக் காலத்தில் உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

