முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
குறித்து இலங்கை இந்திய அரசாங்கங்களிடம் அழுத்தம் கொடுப்பதாக இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (srithaan)தெரிவித்துள்ளார்.

 நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்விடயத்தை அவர்
தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

 ஈழத்தமிழரின் பொருளாதாரத்தை அழித்த இந்திய கடற்றொழிலாளர்கள்

இந்திய கடற்றொழிலாளர்களின்
வருகையால் இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை அரைவாசி அழித்துவிட்டது.
தமது பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும் இயல்பு வாழ்க்கையை
இழந்த நிலையிலும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்த
15 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில்
அழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணமே இந்திய கடற்றொழிலாளர்களின்
வருகைதான்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை | Indian Fishermens Encroachment

அவரக்ளுடைய மீன்பிடிப் பொறிமுறைகள் எமது பகுதி மக்களின் மீன்பிடி வலைகளை
அறுத்தல் மற்றும் அவர்களது உற்பத்திகளை முடக்குதல் ஆகியவை காரணமாக கடற்றொழிலாளர்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை
கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மேலும் அவர்களது
வாழ்வாதாரங்களை அளிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கின்றது.

அழுத்தம் கொடுக்க போகின்றேன்

இது தொடர்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல கடற்றொழிலாளர்கள் என்னிடம்
முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே இந்திய கடற்றொழிலாளர்கள்
வருவார்கள் இடைப்பட்ட நாட்களில் எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும்
வாய்ப்பிருக்கிறது.

இப்பொழுது அதற்கு கூட வழியில்லாமல் உணவுக்காக கூட நாம்
கஷ்டப்படுகிறோம் என நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: சிறீதரன் எடுக்கவுள்ள நடவடிக்கை | Indian Fishermens Encroachment

எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தரப்பிடம் நான் எடுத்து செல்லவும்
இந்தியத்தரப்பிடம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள்
குறித்து தீர்வு காண்பதற்கான அழுத்தம் கொடுத்து அவற்றை
நடைமுறைப்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/0zW6EugTR7U

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.