மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து
வருகின்ற நிலையில், இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால்
மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து
கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே
இருந்தது.
திருப்திகரமான சேவை
அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும்
மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம்.

எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய
கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம்
இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள்
வருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

