தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் நாளைய தினம் (14.11.2024) இடம்பெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் திணைக்கள உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் குறித்த சேவைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை
இதன்காரணமாக தேசிய அடையாள அட்டை உட்பட இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாளைய தினம் திணைக்களத்துக்கு வருகைதருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் ஆட்பதிவு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

இதேவேளை நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/information-department-for-registration-of-persons-1731474239

