முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தவறு செய்துவிட்டு போராட்டம் நடத்துவது நியாயமா: யாழ். கடற்றொழிலாளர்கள் கேள்வி

இலங்கை கடலுக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவது தவறு என நன்கு
தெரிந்தும் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்துவது
நியாயமா என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின்
சம்மேளனத் தலைவர் புனிதாப் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்(Jaffna) உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம்(01.07.2024) இந்திய
கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி இடம்பெற்ற கண்டப்
போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.

அத்துமீறிய கடற்றொழிலாளர்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளரினால் எமது
வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினமும்
வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதம் எனத்
தெரிந்தும் தொடர்ச்சியாக எமது கடற் பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரத்தை
அழித்து வருகின்றனர்.

தவறு செய்துவிட்டு போராட்டம் நடத்துவது நியாயமா: யாழ். கடற்றொழிலாளர்கள் கேள்வி | Jaffa Fishermen S Question To Indian Fishermen

இவ்வாறு அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் போது கடற் படையினரால்
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படும் போது அவர்களை விடுவிக்குமாறு இந்தியாவில்
போராட்டம் நடத்துகிறார்கள்.

எமது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்தியா கடற்றொழிலாளர்களிடம் இருந்து எமது கடற்றொழிலாளர்களை
பாதுகாக்குமாறு கோரி போராட்டம் நடத்தும் நிலையில் இலங்கை கடலில் நுழையும்
போது கைது செய்யப்படும் இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கப் போராட்டம் நடத்துவது
நியாயமா?

தவறு செய்துவிட்டு போராட்டம் நடத்துவது நியாயமா: யாழ். கடற்றொழிலாளர்கள் கேள்வி | Jaffa Fishermen S Question To Indian Fishermen

ஆகவே இலங்கை கடற்படையை வினயமாக கேட்டுக்கொள்கிறோம், எல்லை தாண்டி கடற்றொழிலில்
ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்,
கடற்படைக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.